பிச்சை புகினும்

உங்கள் வாசற்படிகளில் வந்து நிற்கிறேன்
வாருங்கள் வந்து திறவுங்கள்
உங்களிடம் உள்ளவற்றை உவகையோடு உவந்தளிப்பீர்....
சற்றே பொறுங்கள்;
பொருளுக்கும் பணத்துக்கும் வாய் பிளப்பேன் என்றா நினைத்துவிட்டீர்??
உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம் அன்றோ?
கோயிலுக்கு ஏனப்பா போகின்றோம்?

எனக்குத் தேவை உங்களிடம் நிறைந்துள்ள நல்லகுணங்களும் பாசமும் மட்டுமே....! கொடுக்கக் கொடுக்கக் குறையாதைவை இவை, கல்வியைப் போலவே....!
-அருள்நிலவன்

Comments

Popular Posts