நீ-நான் -காதல்-யதார்த்தம்


நீயிருந்தும் இல்லாத 
என் முற்றத்து வெளிகளை
நிறைக்கிறது மேகம்!
நீண்ட வெறும்
புற்தரையில் எஞ்சிய
சிறு மரங்களின் 
நிழலாய்-எனக்கு
நினைவுகள் கொடுப்பது
நீ-நான்
நிரம்பிய அந்த 
அடர்வனத்து வெளிகள்
மீண்டு மீண்டுமாய்
வனத்துள்
புதைந்து கிடக்கின்றன
நானும் நீயும் 
வளர்த்த எம் காதல்!
பண்டை அரசரின்
புதையல்களாய்!

Comments

Popular Posts