தாய் மகனுக்கு

கேள் மகனே!

என் வாழ்வு ஒரு தெளிந்த படிக்கட்டு அல்ல.

தொய்வுகள் தோய்ந்தும்,

பிளவுகள் துருத்தியும்,

பலகைகள் சிதிலமடைந்தும்,

தரையது கம்பளம் விரிக்காது-

வெற்றுப் போர்த்தியும்.

எனினும் நான் தொடர்ந்தும் ஏறிக் கொண்டிருக்கிறேன்,

சிற்சில பொழுதுகளில் சம தரையைச் சந்தித்தும் ,

மூலைகளில் முடுக்கியும்,

இருட்டிலும்,

வெளிச்சம் இல்லாத பேரிருளிலும்

தொடர்கிறது என் பயணம்.

இன்னும் சிறுவன் நீ ,  மகனே! நீ திரும்பிப் போகாதே.

நீ படிகளில் தடம் பதிக்க வேண்டாம்

ஏனெனில் மிகவும் கடினமானது இதுவென்று  - கண்டாய்.

நீ விழுந்தெழும்பும் பொழுது இதுவல்ல -மகனே! 

நான் இன்னும் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறேன்

படிக்கட்டுகளில் ஏறிய படி,

வாழ்வு ஒரு தெளிந்த படிக்கட்டல்ல எனத் தெரிந்தும்.....!


லாங்ஸ்டன் ஹியூக்ஸ் 

- தமிழில்  கப்டன் துஜீவ்

Comments

Popular Posts