அன்ரி அம்மாவும் ஐயாவும்

என் பிஞ்சு வயதில்
குஞ்சே முத்தே கனியமுதே-என்று
நெஞ்சிற் தாங்கி
கொஞ்சி விளையாடி
எழுத்துக்களுக்கு முன்பு
சொற்களை முதன்முறையாய்
அனுபவித்து அறிவித்து
கிஞ்சித்தும் வஞ்சியாச்
செஞ்சடையான் மனத்து
மஞ்சமாய் மடியில் வளர்த்து
எஞ்ஞான்றும் அஞ்சேல்!
என்று அச்சம் தவிர்த்து
சஞ்சி, துசியென்று
கெஞ்சியழைத்து
பஞ்சில் வழத்தி....
துஞ்சலாய் மிஞ்சி வழிந்து
கிடக்கின்ற நினைவுகளாய்ப் புதைந்துபோன

இருவரின் அரிய புகைப்படம்


Comments

Popular Posts